Monday, February 28, 2011

சத்யா ...

இந்த வார்த்தைகள் எழுப்பும் சப்தங்களால்...
இந்த உயிர் முழுதும் காதலால்
நனைந்து தான் போகிறது...

இருகண்வீசிப் போன  உன் ஒரு துளிப்  பார்வை பட்டு 
தெறித்த அம் முதல் கணங்களை.,
நெஞ்சம் மறக்கவே மறுக்கிறது.  

ஒருநாள் நேரில்...
பார்க்காமல் பார்த்தாய்..
பேசாமல் பேசினாய்...(உன் சிரிப்பினில் கரைந்த நானும்)...
இதயங்களை மாற்றிக்கொண்டோம் என்று கூடதெரியாமல்...

சுவாசிக்க  நீ வேண்டும்..
உன் மூச்சுக்காற்று எனக்கு மட்டும்...

பெண்மையை உணர்த்தியவள் நீ..
உணர்கிறேன் நானும்...
ஒரு தாய்மையை .,
நீ என் குழந்தையாய்...

பரிதவிக்கும் உனதன்பில்
காதலில்
வாழ்க்கையில்
புதைந்து போகவே துடித்துப்போகிறேன் ...
உன்னைப் போல...

என்மீதான உனதன்பை
எஞ்சுவதற்கு
முயன்று முயன்று
தோற்றுப் போகிறேன்...
இந்த
தோற்றலும் கூட
சுகம் தான் எனக்கு...

No comments:

Post a Comment